
கழுதையின் முதுகில் அழுக்கு மூட்டைகளை ஏற்றிவைத்தாலும் அது அழுக்கு மூட்டை என்பதை சிந்திக்காமல் கழுதை சுமந்து செல்லும்.*
அது போல் அறிவு நிறைந்த புத்தகங்களை ஏற்றினாலும் அது அழுக்கு மூட்டையைப் போல் சுமந்துதான் செல்லும்*
அதிலுள்ள கருத்துக்கள் ஆழமிக்கவை என்பதை கழுதை அறியாது.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
தான் முதுகில் சுமக்கும் பொருளின் மதிப்பை அறியாத மிருகம்தான் கழுதை.
அது போன்றுதான் வேதத்தைப் பெற்று அதனை வாயளவில் மட்டும் படித்து விட்டு செயலளவில் பின்பற்றாமல் அதிலுள்ள கருத்துக்களை மாற்றியும் மறைத்தும் வந்த சமுதாயத்தை அல்லாஹ் ஏடுகளின் மதிப்பை உணராமல் வெறும் பொதி மூட்டையாகச் சுமக்கும் கழுதைக்கு ஒப்பாகக் கூறுகிறான்.*
இந்த வசனம் இன்றும் நம்மில் பலருக்கு ஒத்துப்போவதை இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது
நம்மில் பலர் குர்ஆனை நன்கு படித்திருப்பார்கள்.
நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளையும் நன்கு உள் வாங்கியிருப்பார்கள்.
ஆனால் மத்ஹப் என்ற மாயையில் வீழ்ந்து கிடப்பார்கள்.
இறந்தவர்களின் சமாதியில் தங்களின் தலையை சாய்ப்பார்கள்.
அப்படி செய்தால் என்ன தவறு என்றும் கேட்பார்கள்.
குர்ஆனின் ஒரு பகுதியை சொல்லி விட்டு மறு பகுதியை மறைத்து விடுவர்.
இவர்களைப் பார்த்தே இறைவன் குர்ஆனிலே 'ஏடு சுமக்கும் கழுதைகள்' என்கிறான்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்